கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் இன்று(19) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளீதரன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) , பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.