தலவாக்கலையில் தேயிலை தோட்டத்தில் நிர்க்கத்தியான சிறுத்தை குட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தையை சிகிச்சைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்ப வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சிறுத்தை குட்டியயை காட்டில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் கண்டு பிடித்து தாய் சிறுத்தையிடம் பலமுறை குட்டியை ஒப்படைக்க முயன்றபோதிலும் தாய் சிறுத்தை குட்டியை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சிறுத்தைக் குட்டி மனிதர்களால் தொடப்பட்டுள்ளது என்பதை மோப்பம் பிடித்ததால் குறித்த தாய் சிறுத்தை தனது குட்டியை நிராகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.