இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பில் இன்று(06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டிருந்தன.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிரஜாவுரிமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பிரஜாவுரிமை இல்லாத அம்மையார் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். இன்னும் சில வாரங்களுக்கு இங்கு இருப்பதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதால் மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.
டயனா கமகே போன்ற சட்டபூர்வமற்றவர்களை பாதுகாக்கும் நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்பட்டுள்ளது. கீதா குமாரசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.