நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் மருதங்கேணி பகுதியில்வைத்து எதிர்நோக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து தெரிவித்தார்.
தங்களது இனம் சார்ந்து போராடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அரசாங்கம் நேரடியாக அச்சுறுத்தல் விடுகின்றது எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு இனம் சார்ந்து, தங்களது மக்கள் சார்ந்து போராடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அரசாங்கம் நேரடியாக அச்சுறுத்தல் விடுகின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாக பட்டப் பகலில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை, இது இந்த நாட்டினை கடந்த காலத்தை நோக்கி இழுத்து செல்லும் என்று அவர் தெரிவித்தார்.