சாவிகா சங்கீத அறிவாலயம் மாற்றுத் திறனுடைய சிறுவர்களும் இசைத்துறையில் பிரகாசிப்பதை நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இசைப் போட்டியானது
இன்று 15 ம் திகதி யாழ்ப்பாணம் மங்கையற்கரசி மகா வித்தியாலயத்தில் காலை 9 மணி முதல் போட்டிகள் இடம்பெற்றது.
இப் போட்டியியின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண விசேட கல்வித் திணைக்களம் உதவிக் கல்விப் பணிப்பாளர் விஸ்வலிங்கம்
விஸ்ணுகரன் கலந்து கொண்டார்.
ஏனைய சிறப்பு விருந்தினர்களாக வேலன் சுவாமிகள், யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவன தலைவர் வைத்திய கலாநிதி ஜெயதேவி கணேசமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப் போட்டிகளில் மாற்றுத்திறனாளி சிறார்கள் ஆர்வமாக பங்கெடுத்திருந்தனர்.