வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று காலை முதல் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை தந்த பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இடம்பெற்றது.
இந்நிலையில் மகோற்சவம் எதிர்வரும்25 தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.