இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கடந்த வரவு – செலவுத் திட்டத்திலும் முன்மொழியப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதல் பார்வையில் கடந்த பட்ஜெட்டிலும் பல விடயங்களை முன்வைத்துள்ளார். அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது. எனவே மீண்டும் அவை முன்வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிதியமைச்சராக அவர் வந்துள்ளார். அப்படியானால், பட்ஜெட் முன்மொழிவுகளில் எங்கள் கொள்கைகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.