கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள 'Shi Yan 6' சீன ஆய்வு கப்பலின் ஆய்வு நடவடிக்கைகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் குழுவொன்று பங்கேற்க உள்ளது.
இதற்கமைய குறித்த நிறுவனத்தின் நான்கு பிரதிநிதிகள் இன்று 'Shi Yan 6' கப்பலுக்கு வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் நாளை (30) மற்றும் நாளைமறுத்தினம் (31) நாட்டின் கடற்பரப்பில் மேற்கு பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன ஆய்வுக் கப்பலான 'Shi Yan 6' மூலம் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு நடவடிக்கையில் கடற்படையின் நீர்வள அறிவியல் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள 'Shi Yan 6' சீன கப்பலின் ஆய்வு நடவடிக்கையில் பங்கேற்கும் நாரா குழு samugammedia கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள 'Shi Yan 6' சீன ஆய்வு கப்பலின் ஆய்வு நடவடிக்கைகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் குழுவொன்று பங்கேற்க உள்ளது.இதற்கமைய குறித்த நிறுவனத்தின் நான்கு பிரதிநிதிகள் இன்று 'Shi Yan 6' கப்பலுக்கு வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கப்பல் நாளை (30) மற்றும் நாளைமறுத்தினம் (31) நாட்டின் கடற்பரப்பில் மேற்கு பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.சீன ஆய்வுக் கப்பலான 'Shi Yan 6' மூலம் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு நடவடிக்கையில் கடற்படையின் நீர்வள அறிவியல் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.