இலங்கையில் வரி விதிக்கப்படும்போது ஏற்படுகின்ற சட்டப் பிரச்சனை தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கு விரைவில் புதிய நீதிமன்றம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான, வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்காக விசேட யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக பல தரப்பினரிடம் வரி அறவிடுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.