கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அதேவேளை மக்கள் நலன்கருதி, நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இப்பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அல்லாவிட்டால் அது மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும் எனவும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.