உள்ளூராட்சி சபைத் தேர்தலை நிறுத்துவதற்கு அமைச்சரவை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்படி யாராவது சொன்னால் அது பொய் என்றும் தெரிவித்தார்.
பொது நிர்வாகச் செயலர் வெளியிட்டுள்ள கடிதம் முற்றிலும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.