வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளர்களின் (எம்.எல்.ரி.) மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்காதமையால் அவர்கள் தங்கள் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரம் கடமையாற்றாதமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். -இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியநாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சி.ஹரிகரன்.
இது தொடர்பில் அவர் இன்று கருத்து தெரிவித்தவை வருமாறு,
வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வடக்கு மாகாண அதிகாரிகள் வழங்க மறுப்பதன் காரணமாகவே அவர்கள் தமது வேலைநாள்கள் தவிர்ந்த சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் மற்றும் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் கடமையாற்றாது தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளார்கள்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 8 ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் கடமையாற்றவேண்டிய இடத்தில் தற்போது 4 பேர் மட்டும் கடமையாற்றி, இந்த வருடம் புதிதாக ஒருவருமாக ஐவர் மட்டுமே கடமையாற்றுகின்றார்கள்.
இவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அவர்கள் அதனைத் தருவார்கள் என நம்பி டிசெம்பர் மாதம் வரை கடமையாற்றினார்கள். கடந்த ஜனவரி 5 ஆம் திகதியே அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். 8 பேர் உள்ள இடத்தில் ஐவர் மட்டும் கடமையாற்றுவது மிகக் கடினமான ஒன்று.
இதனால், சகல நோயாளர்களும் இலவச சேவையைப் பெறுவதாயின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளது. வடக்கின் யாழ்.மாவட்டத்தில் நான்கு பாகங்களிலுமுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து 17 கிலோ மீற்றர் தூரத்தில் யாழ். போதனா வைத்தியசாலை அமைந்துள்ளது. அங்குசென்று ஆய்வுகூட சேவையைப் பெறுவது நோயாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தனியாரிடம் மருத்துவ சேவைகளைப் பெறுவதில் அவர்களிடம் தற்போது காணப்படுகின்ற இயலுமை காரணமாகவும் போக்குவரத்து சிக்கல் காரணமாகவும் எமது சங்கத்திடம் உதவிகேட்டு வருபவர்களுக்கு நாம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை நிலையத்தில் சேவையைப் பெற பண உதவி சங்கத்தின் நிதியிலிருந்து வழங்குகின்றோம்.
இது குறுகிய வருமானத்தை ஈட்டும் எமது சங்கத்தாலும் தொடர்ந்து வழங்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை உள்ளது.
நேற்று (செல்வாய்க்கிழமை) மாலைகூட பெண்நோயியல் மகப்பேற்று விடுதியில் தாய்மையடைந்த அம்மா ஒருவருக்கு அவசரமாக இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வைத்திய நிபுணர் எமது உதவி கேட்டு வெளியே பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பாக உள்ள ஆய்வுகூடம் மூடப்பட்டிருந்தமையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் வைத்தியர்களுக்கும் நோயாளர்களுக்கும் ஏற்பட்டது.
ஆகவே விரைந்து சுகாதாரத்துக்குப் பொறுப்பாக உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சுச் செயலர், பிரதம செயலாளர், பதில் சுகாதார அமைச்சராகிய வடக்கு ஆளுநர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இந்தப் பிரச்சினை ஏணைய மாகாணங்களை விட எமது வடக்கு மாகாணத்திலேயே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் விரைந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். - என்றார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட - நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் பயன் பெற்ற - புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு, சத்திரசிகிச்சைப் பிரிவு நோயாளர்களின் உறவினர்களும் தமது வேதனைகளைத் தெரிவித்தனர்.
ஆய்வுகூடத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவை வழங்க மறுக்கும் அதிகாரிகள் - நோயாளர்கள் சிரமம் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளர்களின் (எம்.எல்.ரி.) மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்காதமையால் அவர்கள் தங்கள் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரம் கடமையாற்றாதமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். -இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியநாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சி.ஹரிகரன்.இது தொடர்பில் அவர் இன்று கருத்து தெரிவித்தவை வருமாறு,வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வடக்கு மாகாண அதிகாரிகள் வழங்க மறுப்பதன் காரணமாகவே அவர்கள் தமது வேலைநாள்கள் தவிர்ந்த சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் மற்றும் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் கடமையாற்றாது தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளார்கள்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 8 ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் கடமையாற்றவேண்டிய இடத்தில் தற்போது 4 பேர் மட்டும் கடமையாற்றி, இந்த வருடம் புதிதாக ஒருவருமாக ஐவர் மட்டுமே கடமையாற்றுகின்றார்கள். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அவர்கள் அதனைத் தருவார்கள் என நம்பி டிசெம்பர் மாதம் வரை கடமையாற்றினார்கள். கடந்த ஜனவரி 5 ஆம் திகதியே அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். 8 பேர் உள்ள இடத்தில் ஐவர் மட்டும் கடமையாற்றுவது மிகக் கடினமான ஒன்று.இதனால், சகல நோயாளர்களும் இலவச சேவையைப் பெறுவதாயின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளது. வடக்கின் யாழ்.மாவட்டத்தில் நான்கு பாகங்களிலுமுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து 17 கிலோ மீற்றர் தூரத்தில் யாழ். போதனா வைத்தியசாலை அமைந்துள்ளது. அங்குசென்று ஆய்வுகூட சேவையைப் பெறுவது நோயாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தனியாரிடம் மருத்துவ சேவைகளைப் பெறுவதில் அவர்களிடம் தற்போது காணப்படுகின்ற இயலுமை காரணமாகவும் போக்குவரத்து சிக்கல் காரணமாகவும் எமது சங்கத்திடம் உதவிகேட்டு வருபவர்களுக்கு நாம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை நிலையத்தில் சேவையைப் பெற பண உதவி சங்கத்தின் நிதியிலிருந்து வழங்குகின்றோம்.இது குறுகிய வருமானத்தை ஈட்டும் எமது சங்கத்தாலும் தொடர்ந்து வழங்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை உள்ளது.நேற்று (செல்வாய்க்கிழமை) மாலைகூட பெண்நோயியல் மகப்பேற்று விடுதியில் தாய்மையடைந்த அம்மா ஒருவருக்கு அவசரமாக இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வைத்திய நிபுணர் எமது உதவி கேட்டு வெளியே பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பாக உள்ள ஆய்வுகூடம் மூடப்பட்டிருந்தமையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் வைத்தியர்களுக்கும் நோயாளர்களுக்கும் ஏற்பட்டது.ஆகவே விரைந்து சுகாதாரத்துக்குப் பொறுப்பாக உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சுச் செயலர், பிரதம செயலாளர், பதில் சுகாதார அமைச்சராகிய வடக்கு ஆளுநர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்தப் பிரச்சினை ஏணைய மாகாணங்களை விட எமது வடக்கு மாகாணத்திலேயே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் விரைந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். - என்றார்.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட - நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் பயன் பெற்ற - புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு, சத்திரசிகிச்சைப் பிரிவு நோயாளர்களின் உறவினர்களும் தமது வேதனைகளைத் தெரிவித்தனர்.