திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவின் மகமாயப்புரம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நேற்று மாலை (04) ஒருவர் கைது செய்யப்பட்டதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் போதை பழக்கம் உடையவர் என்றும் கேரளா கஞ்சாவை உபயோகிக்கும் நோக்கில் அவரது டைமையில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்ததாகவும் துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 420 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர் (34 )வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் இன்று (05) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் துறைமுகப்பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.