• Apr 27 2024

பட்டதாரிகளுக்கு மாத்திரமே இனி ஆசிரியர் நியமனம்! கல்வி அமைச்சு அறிவிப்பு

Chithra / Feb 8th 2023, 7:09 am
image

Advertisement

2028ஆம் ஆண்டு முதல் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

“முதல் சுற்றில், உயர்தர வெட்டுப்புள்ளி மதிப்பெண் ஊடாக, பாடம் வாரியான வெற்றிடங்களின் அடிப்படையில் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

மூன்று வருட கற்கைக்கு பின்னர், இறுதி ஆண்டில், கற்பித்தல் குறித்த நடைமுறைப் பயிற்சியுடன் தகுதியான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பப்படுவார்கள்.

மேலும் தேசிய மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால கல்வி அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண மட்டத்தில் கல்வியை உயர்த்துவதற்கும் மாகாண மட்டத்திலிருந்து ஆதரவைப் பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.


தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தேசிய கொள்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவது மாகாண கல்வி அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

இந்த செயற்பாடுகள் தேசிய மற்றும் மாகாண மட்டங்களுக்கிடையில் நல்ல தொடர்புடன் செய்யப்பட வேண்டும்.

நாட்டில் ஒரு சில பாடசாலைகள் மாத்திரமே சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஒரு நாடாக எம்மால் திருப்தியடைய முடியாது.

மேலும் நாட்டின் முழு பாடசாலை முறைமையையும் மேம்படுத்தி ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே அமைச்சின் பிரதான நோக்கமாகும். என கூறியுள்ளார்.

பட்டதாரிகளுக்கு மாத்திரமே இனி ஆசிரியர் நியமனம் கல்வி அமைச்சு அறிவிப்பு 2028ஆம் ஆண்டு முதல் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அமைச்சில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் கூறுகையில்,“முதல் சுற்றில், உயர்தர வெட்டுப்புள்ளி மதிப்பெண் ஊடாக, பாடம் வாரியான வெற்றிடங்களின் அடிப்படையில் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.மூன்று வருட கற்கைக்கு பின்னர், இறுதி ஆண்டில், கற்பித்தல் குறித்த நடைமுறைப் பயிற்சியுடன் தகுதியான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பப்படுவார்கள்.மேலும் தேசிய மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால கல்வி அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண மட்டத்தில் கல்வியை உயர்த்துவதற்கும் மாகாண மட்டத்திலிருந்து ஆதரவைப் பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.அந்த தேசிய கொள்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவது மாகாண கல்வி அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும்.இந்த செயற்பாடுகள் தேசிய மற்றும் மாகாண மட்டங்களுக்கிடையில் நல்ல தொடர்புடன் செய்யப்பட வேண்டும்.நாட்டில் ஒரு சில பாடசாலைகள் மாத்திரமே சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஒரு நாடாக எம்மால் திருப்தியடைய முடியாது.மேலும் நாட்டின் முழு பாடசாலை முறைமையையும் மேம்படுத்தி ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே அமைச்சின் பிரதான நோக்கமாகும். என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement