• May 17 2024

யாழில் கப்பம் பெறும் கும்பலை கைது செய்ய உத்தரவு! samugammedia

Tamil nila / Oct 15th 2023, 6:00 pm
image

Advertisement

யாழ்.மாவட்டத்தில் விவசாயிகளிடம் கப்பம் பெறும் குழுவை உடனடியாக கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்ப்பாண பொலிஸ் மா அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (15.10) காலை நடைபெற்ற விசேட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் விவசாயிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்.மாவட்ட விவசாயிகள் தமது பயிர்களை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரும்போது, ​​ஒரு குழுவினர் தாங்களாகவே ஏற்பாடு செய்து கப்பம் வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொடிகம்மம், சின்னவெளி சந்தைகளில் இந்த கப்பம் பெறும் கொள்ளைக் கும்பல் சில காலமாக இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளின் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு புலனாய்வு அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் அல்லது கப்பம் கொள்ளைக் கும்பலை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழில் கப்பம் பெறும் கும்பலை கைது செய்ய உத்தரவு samugammedia யாழ்.மாவட்டத்தில் விவசாயிகளிடம் கப்பம் பெறும் குழுவை உடனடியாக கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்ப்பாண பொலிஸ் மா அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (15.10) காலை நடைபெற்ற விசேட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் விவசாயிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.யாழ்.மாவட்ட விவசாயிகள் தமது பயிர்களை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரும்போது, ​​ஒரு குழுவினர் தாங்களாகவே ஏற்பாடு செய்து கப்பம் வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், கொடிகம்மம், சின்னவெளி சந்தைகளில் இந்த கப்பம் பெறும் கொள்ளைக் கும்பல் சில காலமாக இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகளின் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு புலனாய்வு அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் அல்லது கப்பம் கொள்ளைக் கும்பலை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement