• Oct 14 2024

13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை- ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Tamil nila / Oct 13th 2024, 5:40 pm
image

Advertisement

கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு மாவட்டங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயம் அடைந்துள்ளனர்.

235 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 6 ஆயிரத்து 852 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை- ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு மாவட்டங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயம் அடைந்துள்ளனர்.235 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 6 ஆயிரத்து 852 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement