• May 03 2024

சஜித் ஜனாதிபதியான கையோடு நாடாளுமன்றம் கலைப்பு..! வெளியான தகவல்..!

Chithra / Jan 13th 2024, 3:41 pm
image

Advertisement


ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு அதில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற கையோடு நாடாளுமன்றம் கலைக்கப்படும்  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசமைப்பின் பிரகாரம் நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்வு நடத்தப்பட்டாக வேண்டும். 

செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி இப்போது கூறவேண்டியதில்லை.

அவர் கூறாவிட்டாலும் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார். நவம்பர் மாதம் அவர் பதவிப்பிரமாணம் செய்வார்.

அதன்பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 2025 ஜனவரி, பெப்ரவரியில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றார்.

சஜித் ஜனாதிபதியான கையோடு நாடாளுமன்றம் கலைப்பு. வெளியான தகவல். ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு அதில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற கையோடு நாடாளுமன்றம் கலைக்கப்படும்  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.அரசமைப்பின் பிரகாரம் நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்வு நடத்தப்பட்டாக வேண்டும். செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி இப்போது கூறவேண்டியதில்லை.அவர் கூறாவிட்டாலும் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார். நவம்பர் மாதம் அவர் பதவிப்பிரமாணம் செய்வார்.அதன்பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 2025 ஜனவரி, பெப்ரவரியில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement