பாராளுமன்றம் இன்று (23) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை மே 25ஆம் திகதி
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு 26ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை மே 24ஆம் திகதி விவாதத்துக்கு
மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.
இதற்கமைய இன்று முதல் 26 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுள்ளன.
எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகள் தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்க முடிவுசெய்யப்பட்டது.