• May 08 2024

ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்...! மார்ச்-12 இயக்கம் வலியுறுத்து...!

Sharmi / Mar 12th 2024, 12:20 pm
image

Advertisement

ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மார்ச் 12 இயக்கத்தின் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என மார்ச் 12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு தெரிவித்துள்ளது.

மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழுவின் விசேட செய்தியாளர் சந்திப்பு கல்முனை சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று(12)  நடைபெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன், 

உள்ளுராட்சி மாகாண சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தலில் எப்படியான அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு நாம் இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.

மார்ச் 12 அமைப்பின் பாரிய நிகழ்ச்சி திட்டம் எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற இருக்கின்றது.

அவ்வேளை மாவட்டங்கள் தோறும் இவ்வாறான செய்தியாளர் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து இதன் ஊடாக  மக்களுக்கு பல்வேறு தெளிவூட்டல்களை மேற்கொள்ள இருக்கின்றோம்.

இதில் 8 விடயங்களை இங்கு கருத்தில் கொள்ளவுள்ளோம்.அதாவது ஒரு அரசியல்வாதியை தெரிவு செய்ய வேண்டும் என்றால் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும்.

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நாம் நடாத்தி அதன் ஊடாக பல்வேறு பெறுபேறுகளை பெற்றிருக்கின்றோம்.இதன் பிரகாரம் அவர்கள் எம்முடன் ஒரு இணக்கப்பாட்டு  ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள்.அந்த வகையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.ஊழல் இலஞ்சம் அற்ற ஒருவராக இருக்க வேண்டும்.நிதி நிலைமைகளை தெளிவாக அறிந்த ஒருவராக இருத்தல் வேண்டும்.

சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும்.இது போன்று பல செயற்பாடுகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.இவ்வாறான விடயங்களை அரசியல் கட்சிகளும் ஏற்றிருக்கின்றார்கள்.

இங்கு மக்கள் அரசியல்வாதிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.இதை தான் மக்களிடம் நாம் எதிர்பார்க்கின்ற விடயங்களாகும்.இதற்கு ஒரு அட்டை திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்.

இவ்வட்டையில் மக்கள் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளை எவ்வாறு கணிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொண்டால் அவரது செயற்பாடு தொடர்பில் புள்ளிகளை அவ்வட்டையில் குறிப்பிட்டுள்ளோம்.இறுதியாக   எத்தனை புள்ளிகளை குறித்த அரசியல்வாதி பெற்றிருக்கின்றார் என்பதை மக்கள் தீர்மானிக்க முடியும்.இதற்கமைய இன்று இந்த அட்டை நாடு பூராகவும் மக்கள் மத்தியில் விநியோகிக் இருக்கின்றோம்.

இதனூடாக சிறந்த ஒரு அரசியல்வாதியையும் தூய்மையான அரசியலையும் நாம் உருவாக்க வேண்டும் என்பது தான் மார்ச் 12 அமைப்பின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட வி.ரி சகா தேவராஜா கருத்து தெரிவிக்கையில்,

மார்ச்-12 இயக்கம் என்பது தூய்மையான அரசியலை நோக்கிய பயணிக்கின்ற ஒரு அமைப்பு.இலங்கையில் சம காலத்தில் இருக்கின்ற அரசியலானது துரதிஸ்டவசமாக சற்று வித்தியாசமாக சென்று கொண்டிருக்கின்றது.

எனவே, இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இந்த மார்ச் 12 இயக்கமானது உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தகுதியானவர்கள் அரசியல்வாதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும்.தென்னாசிய நாடுகளில் துரதிஸ்டவசமாக இனத்துவ மதத்துவ அரசியல்கள் தலைவிரித்தாடுகின்றது.இவ்வாறானவற்றை நிறுத்த வேண்டும் என்பது தான் மார்ச்-12 இயக்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

 


ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும். மார்ச்-12 இயக்கம் வலியுறுத்து. ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மார்ச் 12 இயக்கத்தின் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என மார்ச் 12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு தெரிவித்துள்ளது.மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழுவின் விசேட செய்தியாளர் சந்திப்பு கல்முனை சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று(12)  நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன், உள்ளுராட்சி மாகாண சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தலில் எப்படியான அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு நாம் இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.மார்ச் 12 அமைப்பின் பாரிய நிகழ்ச்சி திட்டம் எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற இருக்கின்றது.அவ்வேளை மாவட்டங்கள் தோறும் இவ்வாறான செய்தியாளர் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து இதன் ஊடாக  மக்களுக்கு பல்வேறு தெளிவூட்டல்களை மேற்கொள்ள இருக்கின்றோம்.இதில் 8 விடயங்களை இங்கு கருத்தில் கொள்ளவுள்ளோம்.அதாவது ஒரு அரசியல்வாதியை தெரிவு செய்ய வேண்டும் என்றால் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும்.அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நாம் நடாத்தி அதன் ஊடாக பல்வேறு பெறுபேறுகளை பெற்றிருக்கின்றோம்.இதன் பிரகாரம் அவர்கள் எம்முடன் ஒரு இணக்கப்பாட்டு  ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள்.அந்த வகையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.ஊழல் இலஞ்சம் அற்ற ஒருவராக இருக்க வேண்டும்.நிதி நிலைமைகளை தெளிவாக அறிந்த ஒருவராக இருத்தல் வேண்டும்.சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும்.இது போன்று பல செயற்பாடுகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.இவ்வாறான விடயங்களை அரசியல் கட்சிகளும் ஏற்றிருக்கின்றார்கள்.இங்கு மக்கள் அரசியல்வாதிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.இதை தான் மக்களிடம் நாம் எதிர்பார்க்கின்ற விடயங்களாகும்.இதற்கு ஒரு அட்டை திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்.இவ்வட்டையில் மக்கள் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளை எவ்வாறு கணிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.உதாரணமாக ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொண்டால் அவரது செயற்பாடு தொடர்பில் புள்ளிகளை அவ்வட்டையில் குறிப்பிட்டுள்ளோம்.இறுதியாக   எத்தனை புள்ளிகளை குறித்த அரசியல்வாதி பெற்றிருக்கின்றார் என்பதை மக்கள் தீர்மானிக்க முடியும்.இதற்கமைய இன்று இந்த அட்டை நாடு பூராகவும் மக்கள் மத்தியில் விநியோகிக் இருக்கின்றோம்.இதனூடாக சிறந்த ஒரு அரசியல்வாதியையும் தூய்மையான அரசியலையும் நாம் உருவாக்க வேண்டும் என்பது தான் மார்ச் 12 அமைப்பின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.அதேவேளை மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட வி.ரி சகா தேவராஜா கருத்து தெரிவிக்கையில்,மார்ச்-12 இயக்கம் என்பது தூய்மையான அரசியலை நோக்கிய பயணிக்கின்ற ஒரு அமைப்பு.இலங்கையில் சம காலத்தில் இருக்கின்ற அரசியலானது துரதிஸ்டவசமாக சற்று வித்தியாசமாக சென்று கொண்டிருக்கின்றது.எனவே, இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இந்த மார்ச் 12 இயக்கமானது உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தகுதியானவர்கள் அரசியல்வாதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும்.தென்னாசிய நாடுகளில் துரதிஸ்டவசமாக இனத்துவ மதத்துவ அரசியல்கள் தலைவிரித்தாடுகின்றது.இவ்வாறானவற்றை நிறுத்த வேண்டும் என்பது தான் மார்ச்-12 இயக்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement