பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக காவல்துறை விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 076 545 3454 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.