• May 17 2024

யாழில் பரிதாபம்...! மூன்று வருடங்களுக்கு முன்னர் கீழே விழுந்த குடும்பஸ்தர் நேற்று உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Sep 17th 2023, 7:43 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியைச் சேர்ந்த 44வயதான செ.மகேந்திரம்  என்ற 5 பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்  மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.

அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்தார் எனவும் அதற்கு பின்னர் வழமை போல சாதாரண நிலையில் இருந்ததாக அவரது மனைவியால் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது மூளையில் இரத்தக் கசிவு இருப்பதாக தெரிவித்து, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்தவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

யாழில் பரிதாபம். மூன்று வருடங்களுக்கு முன்னர் கீழே விழுந்த குடும்பஸ்தர் நேற்று உயிரிழப்பு.samugammedia வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,வட்டுக்கோட்டை மூளாய் பகுதியைச் சேர்ந்த 44வயதான செ.மகேந்திரம்  என்ற 5 பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்  மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்தார் எனவும் அதற்கு பின்னர் வழமை போல சாதாரண நிலையில் இருந்ததாக அவரது மனைவியால் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மூளையில் இரத்தக் கசிவு இருப்பதாக தெரிவித்து, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement