கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லாற்றுப் பகுதியில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்றையதினம்(17) இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு உழவு இயந்திரங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த உழவு இயந்திரங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.