• May 19 2024

யாழில் பரிதாபம்..! மாங்காய் பறிக்க முயன்ற இளைஞன் உயிரிழப்பு..! samugammedia

Sharmi / Jun 12th 2023, 1:06 pm
image

Advertisement

மாங்காய் பறிப்பதற்கு முயன்ற இளைஞன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்திக்கு அண்மையாகவுள்ள கட்டடத்துக்கு அருகில் வீதிக்கரையில் இவர் பயணித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லொறியில் ஒரு காலும் மதிலில் ஒரு காலும் வைத்து ஏறி மாங்காய் பிடுங்குவதற்கு அவர் முயன்றபோது, எதிர்பாராத விதமாக தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு(11) உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு, பிரான்பற்றைச் சேர்ந்த வன்னியசிங்கம் ரவீந்திரன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் பரிதாபம். மாங்காய் பறிக்க முயன்ற இளைஞன் உயிரிழப்பு. samugammedia மாங்காய் பறிப்பதற்கு முயன்ற இளைஞன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்திக்கு அண்மையாகவுள்ள கட்டடத்துக்கு அருகில் வீதிக்கரையில் இவர் பயணித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லொறியில் ஒரு காலும் மதிலில் ஒரு காலும் வைத்து ஏறி மாங்காய் பிடுங்குவதற்கு அவர் முயன்றபோது, எதிர்பாராத விதமாக தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு(11) உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு, பிரான்பற்றைச் சேர்ந்த வன்னியசிங்கம் ரவீந்திரன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement