• Jul 27 2024

திருமலையில் கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது..!samugammedia

Sharmi / Jun 1st 2023, 11:16 pm
image

Advertisement

கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் இன்று (01)  கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


திருகோணமலை அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரளா கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு செல்லும்போது 96 ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை- 10ம்  கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் முத்தலிப் மாஜித் (54வயது) எனவும் தெரிய வருகிறது.

குறித்த பொலிஸ்  தன்னுடைய நண்பர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அனுராதபுர சந்தியின் பார்சல் ஒன்று இருப்பதாக கூறியதாகவும் இதனை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டிகள் செல்லும் போது தன்னை கைது செய்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அக்போபுர பொலிஸ் அதிரடி படையினருக்கு குறித்த பொலிஸ் உத்தியோகத் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த நபரிடம் கஞ்சாவை விற்பனைக்காக பெற்றுக் கொள்ளும் விதத்தில்  விஷேட  பொலிஸ் அதிரடி படையினரின் தகவல் வழங்குனர்கள்  ஊடாக கஞ்சா போதைப் பொருளை பெற்றுக்கொள்ளும் போதே குறித்த பொலிஸார் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திடம் ஒரு கிலோ பத்து கிரேம்  கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமலையில் கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது.samugammedia கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் இன்று (01)  கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரளா கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு செல்லும்போது 96 ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை- 10ம்  கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் முத்தலிப் மாஜித் (54வயது) எனவும் தெரிய வருகிறது.குறித்த பொலிஸ்  தன்னுடைய நண்பர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அனுராதபுர சந்தியின் பார்சல் ஒன்று இருப்பதாக கூறியதாகவும் இதனை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டிகள் செல்லும் போது தன்னை கைது செய்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.ஆனாலும் அக்போபுர பொலிஸ் அதிரடி படையினருக்கு குறித்த பொலிஸ் உத்தியோகத் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த நபரிடம் கஞ்சாவை விற்பனைக்காக பெற்றுக் கொள்ளும் விதத்தில்  விஷேட  பொலிஸ் அதிரடி படையினரின் தகவல் வழங்குனர்கள்  ஊடாக கஞ்சா போதைப் பொருளை பெற்றுக்கொள்ளும் போதே குறித்த பொலிஸார் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திடம் ஒரு கிலோ பத்து கிரேம்  கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement