இலங்கையில் போதைப்பொருள் விவகாரம் இவ்வளவு பூதாகரமாக மாறுவதற்கு அரசியல்வாதிகளே காரணம் எனவும் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் தடுத்து நிறுத்தப்படாமையே சிறுவர்களும், இளைஞர்களும் தற்பொழுது துன்பங்களை அனுபவிப்பதற்கு காரணம் என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை முழுமையாக கைதுசெய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தலையீடு காணப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பது மிகவும் கடினமான விடயமாக இருப்பதனால், போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு காரணம் அரசியல்வாதிகளே : எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் samugammedia இலங்கையில் போதைப்பொருள் விவகாரம் இவ்வளவு பூதாகரமாக மாறுவதற்கு அரசியல்வாதிகளே காரணம் எனவும் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் தடுத்து நிறுத்தப்படாமையே சிறுவர்களும், இளைஞர்களும் தற்பொழுது துன்பங்களை அனுபவிப்பதற்கு காரணம் என்று தெரிவித்தார்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை முழுமையாக கைதுசெய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தலையீடு காணப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பது மிகவும் கடினமான விடயமாக இருப்பதனால், போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.