இன்றைய (20) தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஆரம்பத்தில் ஒவ்வொரு கலைப்பீட மாணவர் அணியினரும் பொங்கலிட்டதுடன் பண்பாட்டு விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து மாலை 2 மணியளவில் கைலாசபதி கலையரங்களில் கலை கலாச்சார பல்சுவை நிகழ்வுகளுடன் தைப்பொங்கல் விழா பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அரங்கு நிறைந்த பெருந்தொகையான மாணவர்களின் பங்கெடுப்புடன் நிகழ்ந்தேறிய பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமும்,சிறப்பு விருந்தினராக இந்து கற்கைகள் பீட பீடாதிபதி பத்மநாபன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.