யூரியா உரத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
அதன்படி 50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப் பொதியை 9000 ரூபாவிற்கு விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புதிய விலையின் கீழ் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யூரியா உரத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.