யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக்க மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் இன்று அதிபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிபரை நாளைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை முன்னெடுக்க உள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழில் பாடசாலை மாணவியை மூர்க்கத்தனமாக தாக்கிய அதிபர் அதிரடியாக கைது samugammedia யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பாக்க மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் இன்று அதிபரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அதிபரை நாளைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை முன்னெடுக்க உள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.