விஜய்யின் தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மாடலாக இருந்து நடிகையான பிரியா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவர் 'தளபதி 67' படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ரியா ஆனந்த் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது பணி மற்றும் பயணங்கள் பற்றிய வழக்கமான அப்டேட்டுகளை அதில் பகிர்ந்து கொள்கிறார்.
சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'தளபதி 67' தொடர்பான ட்வீட்டை லைக் செய்திருந்தார். இதனால் அவர் விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிப்பதாக சலசலப்பு எழுந்துள்ளது. இது உண்மையாக இருந்தால், விஜய்யுடன் ப்ரியா ஆனந்த் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.
விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜை இந்த வார தொடக்கத்தில், அதாவது டிசம்பர் 5-ஆம் தேதி நடந்தது.
ஆனால் தயாரிப்பாளர்கள் பூஜையின் எந்த படங்களையும் வெளியிடவில்லை. அதோடு படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் 'தளபதி 67' பூஜையில் கலந்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் விஜய் இந்த நிகழ்விற்கு கறுப்பு நிற உடையில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
'தளபதி 67' ஒரு பான்-இந்தியன் ஆக்ஷன் படம் என்று கூறப்படுகிறது. இதன் சாட்டிலைட் உரிமைகள் ஏற்கனவே மிகப்பெரும் விலைக்கு விற்றுவிட்டதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் கேங்ஸ்டராக நடிக்கும் இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தளபதி 67' படத்தில் பிரியா ஆனந்த் விஜய்யின் தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மாடலாக இருந்து நடிகையான பிரியா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவர் 'தளபதி 67' படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரியா ஆனந்த் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது பணி மற்றும் பயணங்கள் பற்றிய வழக்கமான அப்டேட்டுகளை அதில் பகிர்ந்து கொள்கிறார். சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'தளபதி 67' தொடர்பான ட்வீட்டை லைக் செய்திருந்தார். இதனால் அவர் விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிப்பதாக சலசலப்பு எழுந்துள்ளது. இது உண்மையாக இருந்தால், விஜய்யுடன் ப்ரியா ஆனந்த் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜை இந்த வார தொடக்கத்தில், அதாவது டிசம்பர் 5-ஆம் தேதி நடந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் பூஜையின் எந்த படங்களையும் வெளியிடவில்லை. அதோடு படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் 'தளபதி 67' பூஜையில் கலந்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் விஜய் இந்த நிகழ்விற்கு கறுப்பு நிற உடையில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.'தளபதி 67' ஒரு பான்-இந்தியன் ஆக்ஷன் படம் என்று கூறப்படுகிறது. இதன் சாட்டிலைட் உரிமைகள் ஏற்கனவே மிகப்பெரும் விலைக்கு விற்றுவிட்டதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் கேங்ஸ்டராக நடிக்கும் இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.