யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களாலேயே இன்று பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
இந்நிலையில் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்தனர்.