கொழும்பு - காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலக பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ETI மோசடி இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள போதும் தமக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என்பதை ஆர்ப்பாட்டக்காரரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த சந்தப்பத்தில் அப்பகுதியில் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது,
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட ஆர்ப்பாட்ட பிரிதிநிதிகள் சிலர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.