• Sep 20 2024

தமிழர் பகுதியில் திடீர் சோதனை..! க​ஜமுத்துடன் சிக்கிய இருவர்..! samugammedia

Chithra / Jun 11th 2023, 12:36 pm
image

Advertisement


வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ​இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுற்றிவளைப்பின்​போது  கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்டது. அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்கப்பட்டது.

காரில் இருந்த 26, 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள், தெ‌ஹியந்தர, ஹக்மன பிர​​தேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த ​​பொலிஸ் ஊடக பிரிவு மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும், வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.


தமிழர் பகுதியில் திடீர் சோதனை. க​ஜமுத்துடன் சிக்கிய இருவர். samugammedia வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ​இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பின்​போது  கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்டது. அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்கப்பட்டது.காரில் இருந்த 26, 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தெ‌ஹியந்தர, ஹக்மன பிர​​தேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த ​​பொலிஸ் ஊடக பிரிவு மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும், வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement