சாவகச்சேரி - மட்டுவில் இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் பொங்கல் வழிபாடுகள் இன்றைய தினம் ( 20) இடம்பெற்றன.
பங்குனி மாதத்தில் வருகின்ற திங்கட்கிழமைகளில் இவ் விரதம் பெண்களால் அதிகம் கடைப்பிடிக்கப்படுவது வழமை.
இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வர்.
பங்குனித் திங்கள் உற்சவமானது கண்ணகை அம்மன் ஆலயங்களில் அதிகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.