ஆயிரம் தேசிய பாடசாலைகள் என்ற வேலைத்திட்டத்தில் தகுதியற்ற பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக
ஜக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கல்வி அமைச்சரிடம் பல கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
குறிப்பாக ரணில் தலைமையிலான அரசாங்கம் கொத்தணி பாடசாலை முறையை அறிமுகப்படுத்தியதாகவும்
அந்த வேலைத்திட்டத்தின் கால எல்லை தொடர்பாகவும் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.