• Sep 21 2024

மொட்டு எம்.பிக்களைப் பாதுகாப்பதால் ரணிலே அவர்களின் வேட்பாளர் - ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை! samugammedia

Tamil nila / May 16th 2023, 7:55 am
image

Advertisement

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு எம்.பிக்களை நல்லமுறையில் பாதுகாத்துக்கொண்டு போகின்றார். இதனால் ரணிலையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர்" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்குத் தேர்தலில் விருப்பமில்லை. இவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவர்களை நல்ல முறையில் பாதுகாத்துக்கொண்டு போகின்றார். இதனால் ரணிலையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர்.

நாம் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே வேட்பாளராக நிறுத்துவோம். இதில் மாற்றமில்லை. அவரே ஜனாதிபதியாகத் தெரிவாவார்." - என்றார்.

மொட்டு எம்.பிக்களைப் பாதுகாப்பதால் ரணிலே அவர்களின் வேட்பாளர் - ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை samugammedia "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு எம்.பிக்களை நல்லமுறையில் பாதுகாத்துக்கொண்டு போகின்றார். இதனால் ரணிலையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர்" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்குத் தேர்தலில் விருப்பமில்லை. இவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவர்களை நல்ல முறையில் பாதுகாத்துக்கொண்டு போகின்றார். இதனால் ரணிலையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர்.நாம் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே வேட்பாளராக நிறுத்துவோம். இதில் மாற்றமில்லை. அவரே ஜனாதிபதியாகத் தெரிவாவார்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement