கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட அவமானத்தை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை கலைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததாக என முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சி மூத்தவர்களுடன் ரணில் விக்ரமசிங்க பல கலந்துரையாடல்களைக் மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில உறுப்பினர்கள் கட்சியை கலைக்கப்படகூடாது என்று விரும்பியிருந்தனர்.
அதில் தாமும் ஒருவன் என்று நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராக இருப்பது கட்சிக்கு ஒரு பெரிய சொத்து என்றும், ரணில் விக்ரமசிங்க ஒரு சிறந்த தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன,உயிர்வாழ்வதற்காக ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நவீன் திசாநாயக்க,ரணில் விக்ரமசிங்கவை எவராலும் பயன்படுத்த முடியாது என்று தனது அனுபவ ரீதியாக கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஓருவர், அவர்கள் அவரைப் பயன்படுத்துவதாக உணரலாம். ஆனால் அவர், அவர்களை மிகவும் தொழில்நுட்பமான முறையில் பயன்படுத்துகிறார் என்றும் நவின் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை கலைக்குமாறு ரணில் முன்மொழிவு- வெளியான தகவல்SamugamMedia கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட அவமானத்தை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை கலைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததாக என முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கட்சி மூத்தவர்களுடன் ரணில் விக்ரமசிங்க பல கலந்துரையாடல்களைக் மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் சில உறுப்பினர்கள் கட்சியை கலைக்கப்படகூடாது என்று விரும்பியிருந்தனர்.அதில் தாமும் ஒருவன் என்று நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராக இருப்பது கட்சிக்கு ஒரு பெரிய சொத்து என்றும், ரணில் விக்ரமசிங்க ஒரு சிறந்த தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பொதுஜன பெரமுன,உயிர்வாழ்வதற்காக ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நவீன் திசாநாயக்க,ரணில் விக்ரமசிங்கவை எவராலும் பயன்படுத்த முடியாது என்று தனது அனுபவ ரீதியாக கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.பொதுவாக ஓருவர், அவர்கள் அவரைப் பயன்படுத்துவதாக உணரலாம். ஆனால் அவர், அவர்களை மிகவும் தொழில்நுட்பமான முறையில் பயன்படுத்துகிறார் என்றும் நவின் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.