• May 09 2024

ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்.! - ரங்கே பண்டார!SamugamMedia

Sharmi / Feb 28th 2023, 9:50 am
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை என்றால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற 54 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு மேடையில் அமர்த்திக்காட்டுமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு சவால் விடுத்திருந்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 56 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுன் இணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகளை உருவாக்கியவர்கள் ஒருபோதும் நிலைத்திருக்கவில்லை. எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, லலித் அத்துலத் முதலி, ருக்மன் சேனாநாயக்க காமினி திஸாநாயக்க என பிரிந்து சென்ற எவரும் வரலாற்றில் நிலைத்திருக்கவில்லை.

அதே நிலைத்தான் தற்போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடம்பெறப்போகிறது. ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பல குழுக்ககளாக பிளவுபட்டிருக்கிறது.

பொன்சேகா அணி, ராஜித அணி, சம்பிக்க அணி என பிளவு பட்டிருக்கிறது. இவர்களை ஒன்றிணைப்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கு முடியாது. அதனால் அவர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு லக்ஸ்மன் கிரியெல்லவிடம் பொறுப்புக்கொடுத்துவிட்டு, நாடுபூராகவும் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அடுத்த பொதுத் தேர்தலிலாகும்போது ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாசவும், லக்ஸ்மன் கிரியெல்லவும் மாத்திரமே இருப்பார்கள்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாணத்திலும் கட்சியை பலப்படும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் என தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள். - ரங்கே பண்டாரSamugamMedia ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை என்றால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற 54 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு மேடையில் அமர்த்திக்காட்டுமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார சவால் விடுத்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு சவால் விடுத்திருந்தார்.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 56 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுன் இணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகளை உருவாக்கியவர்கள் ஒருபோதும் நிலைத்திருக்கவில்லை. எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, லலித் அத்துலத் முதலி, ருக்மன் சேனாநாயக்க காமினி திஸாநாயக்க என பிரிந்து சென்ற எவரும் வரலாற்றில் நிலைத்திருக்கவில்லை. அதே நிலைத்தான் தற்போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடம்பெறப்போகிறது. ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பல குழுக்ககளாக பிளவுபட்டிருக்கிறது. பொன்சேகா அணி, ராஜித அணி, சம்பிக்க அணி என பிளவு பட்டிருக்கிறது. இவர்களை ஒன்றிணைப்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கு முடியாது. அதனால் அவர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு லக்ஸ்மன் கிரியெல்லவிடம் பொறுப்புக்கொடுத்துவிட்டு, நாடுபூராகவும் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார்.அடுத்த பொதுத் தேர்தலிலாகும்போது ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாசவும், லக்ஸ்மன் கிரியெல்லவும் மாத்திரமே இருப்பார்கள்.அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாணத்திலும் கட்சியை பலப்படும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement