கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார இலங்கை கிரிக்கெட் சபை உடனான கோப் கூட்டத்தின் போது பங்குபற்றியமை குறித்து விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்.
கோப் தலைவரின் மகன் கனிஷ்க பண்டார செவ்வாய்க்கிழமை குழுக் கூட்டத்தில் பங்கேற்றது தவறு.
அவர் பேராசிரியர் பண்டாரவின் ஊடகப் பொறுப்பாளர் என்ற வகையில் வந்துள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.