• May 04 2024

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளை சந்தித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்...!samugammedia

Sharmi / Sep 9th 2023, 12:04 pm
image

Advertisement

ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள்  தமக்கான ஆதரவை வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின்  பிரதிநிதிகள் சிலரை  நேற்றைய தினம்(08)  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு இணைந்த மாவட்டங்களை சேர்ந்த  நாங்கள் இன்று (நேற்று) நியூஸ்லாந்து தூதரகம் பிரித்தானிய தூதரகம்,நெதர்லாந்து தூதரகம் அவுஸ்ரேலியா தூதரக அதிகாரிகளை சந்தித்தோம்.(samugammedia)

எமது உறவுகளுக்கான சர்வதேச நீதிபொறிமுறையினை நாங்கள் அவர்களிடம் கேட்டிருந்தோம்.(samugammedia)  அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம், ரி.ஆர்.சி அலுவலகத்தில் எமக்கு   உடன்பாடு ஏன் இல்லை என்பதையும் நாங்கள்  தெளிவுபடுத்தி இருக்கின்றோம்  

நாங்கள் நீண்டகாலமாக போராடி வருவதால் எமக்கான அச்சுறுத்தல்களையும்,  அடக்குமுறைகளும் எவ்வாறு இருக்கிறது என்ற உண்மை நிலவரத்தையும் எடுத்து கூறியிருந்தோம்

எமக்கான ஒரு நீதிப்பொறிமுறையை பெற்றுத் தரும்படியும் எமது உறவுகளுக்கு இதுவரையில் நீதி கிடைக்காமையால் ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான ஆதரவினை சகல நாடுகளும்  தர வேண்டும் எனக்கோரியிருந்தோம்.

நாங்கள் உரிமைகளை இழந்து இங்கு செயற்படுகின்றோம் எமது உரிமைகளை பெறுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் நாம் ஒரு இனமாக வாழ வேண்டும் என்பதற்காக இன்று அவர்களிடம் எமது கலந்துரையாடலை மேற்கொண்டு உள்ளோம் என தெரிவித்தனர்.  (samugammedia)

இந்த சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா,மன்னார், அம்பாறை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டனர்.


வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளை சந்தித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.samugammedia ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள்  தமக்கான ஆதரவை வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின்  பிரதிநிதிகள் சிலரை  நேற்றைய தினம்(08)  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு இணைந்த மாவட்டங்களை சேர்ந்த  நாங்கள் இன்று (நேற்று) நியூஸ்லாந்து தூதரகம் பிரித்தானிய தூதரகம்,நெதர்லாந்து தூதரகம் அவுஸ்ரேலியா தூதரக அதிகாரிகளை சந்தித்தோம்.(samugammedia)எமது உறவுகளுக்கான சர்வதேச நீதிபொறிமுறையினை நாங்கள் அவர்களிடம் கேட்டிருந்தோம்.(samugammedia)  அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம், ரி.ஆர்.சி அலுவலகத்தில் எமக்கு   உடன்பாடு ஏன் இல்லை என்பதையும் நாங்கள்  தெளிவுபடுத்தி இருக்கின்றோம்  நாங்கள் நீண்டகாலமாக போராடி வருவதால் எமக்கான அச்சுறுத்தல்களையும்,  அடக்குமுறைகளும் எவ்வாறு இருக்கிறது என்ற உண்மை நிலவரத்தையும் எடுத்து கூறியிருந்தோம் எமக்கான ஒரு நீதிப்பொறிமுறையை பெற்றுத் தரும்படியும் எமது உறவுகளுக்கு இதுவரையில் நீதி கிடைக்காமையால் ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான ஆதரவினை சகல நாடுகளும்  தர வேண்டும் எனக்கோரியிருந்தோம். நாங்கள் உரிமைகளை இழந்து இங்கு செயற்படுகின்றோம் எமது உரிமைகளை பெறுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் நாம் ஒரு இனமாக வாழ வேண்டும் என்பதற்காக இன்று அவர்களிடம் எமது கலந்துரையாடலை மேற்கொண்டு உள்ளோம் என தெரிவித்தனர்.  (samugammedia)இந்த சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா,மன்னார், அம்பாறை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement