• Sep 20 2024

நாட்டிலுள்ள புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து- சபையில் எச்சரிக்கை விடுத்த சஜித்!samugammedia

Sharmi / Apr 4th 2023, 12:09 pm
image

Advertisement

புற்றுநோய் வைத்தியசாலைக்கு புதிய புற்றுநோய் எதிர்ப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பதிலாக பழைய உபகரணங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

செயலாளர் அனுப்பிய கடிதத்தின் பிரதியை சமர்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், புற்றுநோய் சிகிச்சை இயந்திரங்கள் புதுப்பிக்கப்படாமையால் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அண்மைய கதிர்வீச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதையும், நிறுவப்பட்டவற்றை புதுப்பிப்பதையும் தவிர்த்து, காலாவதியான கதிர்வீச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்ய செயலாளர் ஏன் முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டிலுள்ள புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து- சபையில் எச்சரிக்கை விடுத்த சஜித்samugammedia புற்றுநோய் வைத்தியசாலைக்கு புதிய புற்றுநோய் எதிர்ப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பதிலாக பழைய உபகரணங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செயலாளர் அனுப்பிய கடிதத்தின் பிரதியை சமர்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், புற்றுநோய் சிகிச்சை இயந்திரங்கள் புதுப்பிக்கப்படாமையால் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அண்மைய கதிர்வீச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதையும், நிறுவப்பட்டவற்றை புதுப்பிப்பதையும் தவிர்த்து, காலாவதியான கதிர்வீச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்ய செயலாளர் ஏன் முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement