இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு வெறும் மாயை எனவும் அது உண்மையான அதிகரிப்பு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மீண்டும் ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது எம்.உதயகுமார் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்பொழுது டொலரின் பெறுமதியும் வைத்து நாடகம் ஆடிவருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை எனவும் இதனால் போராட்டங்களும் அதிகரித்துள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.