உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். இதில் மூன்றுபேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழுபேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படையினர் கெர்ஷன் மீது 76 முறை ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக பிராந்திய இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய படையினர் நகரத்தின் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய ஆரம்ப காலப்பகுதியில் கெர்ஷனின் தலைநகரத்தை கடந்த மார்ச் மாதம் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு வசித்து வந்த 2 இலட்சத்து 90 ஆயிரம் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கெர்ஷனில் 76 முறை ஷெல் தாக்குதல் நடத்திய ரஷ்யா : மூவர் உயிரிழப்பு SamugamMedia உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். இதில் மூன்றுபேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழுபேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படையினர் கெர்ஷன் மீது 76 முறை ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக பிராந்திய இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய படையினர் நகரத்தின் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய ஆரம்ப காலப்பகுதியில் கெர்ஷனின் தலைநகரத்தை கடந்த மார்ச் மாதம் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு வசித்து வந்த 2 இலட்சத்து 90 ஆயிரம் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.