உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க ரஷ்யா உளவு பலூன்களை பயன்படுத்தக்கூடும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் படைகள் கடந்த புதன்கிழமையன்று உளவு கருவிகள், மற்றும் ரேடார் பிரதிபலிப்பாளர்களைக் கொண்டு சென்றதாக நம்பப்படும் ஆறு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் உளவு பலூன்களின் மூலம் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகள் கண்காணிக்கப்படலாம் எனவும், அதன் மூலம் தாக்குதல் நடத்த ரஷ்யா முயற்சிக்கலாம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.