• Sep 21 2024

மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்...! ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை...!

Sharmi / Jun 7th 2024, 5:37 pm
image

Advertisement

மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார் என ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கே எனவும் அதேவேளை சஜித் தலைமையில் வெகுவிரைவில் மெகா கூட்டணி மலரும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் கள்ளவர்கள் அற்றவர்களை நாம் இணைத்துக்கொள்வோம்.

இந்த நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே. பல சிங்களக் கட்சிகளும் சஜித்துக்கே ஆதரவு. எனவே, இவை அனைத்தும் இணைந்து பலமான அணி உருவாகும்.

இன்னும் மூன்று பூரணை (போயா) தினங்கள் முடிந்த பின்னர் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதியாக இருப்பார்.இது உறுதி எனவும் தெரிவித்தார்.

மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார். ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை. மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார் என ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கே எனவும் அதேவேளை சஜித் தலைமையில் வெகுவிரைவில் மெகா கூட்டணி மலரும் எனவும் அவர் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் கள்ளவர்கள் அற்றவர்களை நாம் இணைத்துக்கொள்வோம்.இந்த நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே. பல சிங்களக் கட்சிகளும் சஜித்துக்கே ஆதரவு. எனவே, இவை அனைத்தும் இணைந்து பலமான அணி உருவாகும்.இன்னும் மூன்று பூரணை (போயா) தினங்கள் முடிந்த பின்னர் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதியாக இருப்பார்.இது உறுதி எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement