எனது குடும்பத்திலிருந்து எவரையும் அரசியல் களத்தில் இறக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவின் மனைவி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வருவதற்கு தயாராகிவருகின்றார் என வெளியாகும் தகவலையும் அவர் முற்றாக மறுத்துள்ளார்.
எப்போதும் அவர் சமூக ஆர்வவராகவே செயற்படுவார். நாட்டு மக்களின் நலனுக்காக எனது மனைவி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார். நானோ, எனது மனைவியோ குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.