அச்சுவேலியிலுள்ள மதபோதகர் அடியாட்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு செந்தமான கட்டடத்தில் அடாத்தாக தங்கியிருந்ததாகவும், ஆனால் தற்போது தமது பிரதேச மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்
கொடுக்கும் அளவிற்கு அவரின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அச்சுவேலி பிரதேசத்தில் வசிக்கின்ற பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுவேலியில் பெண் ஒருவரின் கழுத்தினை நெரித்து அச்சுறுத்தி பின்னர் பத்திரிகை ஒன்றின் தலைமையத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்த மத போதகருக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது எமது சமூகத்தின் செய்தி பிரிவு எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
மாணவர்களுக்கு கல்வியை போதிக்கப்போவதாக பொய்யாக கூறிக்கொண்டே போதகர் கட்டடத்தில் தங்கியிருப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மதபோதகரின் செயற்பாட்டினால் பிரதேச மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உரிய அதிகாரிகள் இதனை அவதானித்து உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு பிரதேச வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இறுதியில் மனிதர்களை கடிக்கும் மதபோதகர் - ஆதங்கப்படும் அச்சுவேலி பிரதேசவாசி samugammedia அச்சுவேலியிலுள்ள மதபோதகர் அடியாட்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு செந்தமான கட்டடத்தில் அடாத்தாக தங்கியிருந்ததாகவும், ஆனால் தற்போது தமது பிரதேச மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் கொடுக்கும் அளவிற்கு அவரின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அச்சுவேலி பிரதேசத்தில் வசிக்கின்ற பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.அச்சுவேலியில் பெண் ஒருவரின் கழுத்தினை நெரித்து அச்சுறுத்தி பின்னர் பத்திரிகை ஒன்றின் தலைமையத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்த மத போதகருக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இதன் போது எமது சமூகத்தின் செய்தி பிரிவு எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.மாணவர்களுக்கு கல்வியை போதிக்கப்போவதாக பொய்யாக கூறிக்கொண்டே போதகர் கட்டடத்தில் தங்கியிருப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.இந்த மதபோதகரின் செயற்பாட்டினால் பிரதேச மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உரிய அதிகாரிகள் இதனை அவதானித்து உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு பிரதேச வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.