• May 21 2024

பேஸ்புக் ஊடாக களியாட்ட நிகழ்வு: 12 இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி samugammedia

Chithra / Jun 25th 2023, 6:27 am
image

Advertisement

அவிசாவளை - குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் 12 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதாவக்கை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின்படி, 25க்கும் மேற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் அவர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விடுதியின் உரிமையாளர் ஃபேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்களில் கஹதுடுவ, பலாங்கொடை, எஹெலியகொட, அவிசாவளை மற்றும் குருகல்ல போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பேஸ்புக் ஊடாக களியாட்ட நிகழ்வு: 12 இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி samugammedia அவிசாவளை - குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் 12 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சீதாவக்கை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின்படி, 25க்கும் மேற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் அவர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.குறித்த விடுதியின் உரிமையாளர் ஃபேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.கைதானவர்களில் கஹதுடுவ, பலாங்கொடை, எஹெலியகொட, அவிசாவளை மற்றும் குருகல்ல போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement