உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாதம் மார்ச் 09 ம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 22,23 மற்றும் 24ம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு, உள்ளூராட்சி தேர்தலுக்கு அவசியமான நிதியை வழங்குமாறு கோரி இன்று நிதியமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த 300 மில்லியன் ரூபாய் அவசியம் என முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதுவரை 100 மில்லியன் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அவர்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் தொடர்பாக திறைசேரியின் செயலாளருடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு SamugamMedia உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மாதம் மார்ச் 09 ம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 22,23 மற்றும் 24ம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அத்தோடு, உள்ளூராட்சி தேர்தலுக்கு அவசியமான நிதியை வழங்குமாறு கோரி இன்று நிதியமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த 300 மில்லியன் ரூபாய் அவசியம் என முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.எனினும், இதுவரை 100 மில்லியன் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அவர்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹோ தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தேர்தல் தொடர்பாக திறைசேரியின் செயலாளருடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.