இலங்கையின் 25 ஆவது இராணுவத் தளபதியாக மேயர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராணுவத்தளபதி லெப்டினல் ஜெனரல் லிகும் லியனகேவின் சேவை கால நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
இந்நிலையில், மேயர் ஜெனரல் சஞ்சய வனசிங்க எதிர்வரும் ஒக்ரோபர் 13 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார். எனினும் சஞ்சய வணசிங்கவுக்கு சேவைக்கால நீடிப்பை வழங்கி, லிகும்லியனகேவுக்கு பின்னர் அவரை இராணுவத் தளபதியாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
முன்னாள் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த மகனான, சஞ்சய் வனசிங்க இராணுவத்தளபதியானால் அது உலகசாதனையாக அமையலாம் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தந்தையும்,மகனும் இராணுவத் தளபதியாக இதுவரை எந்தவொரு நாட்டிலும் பதவி வகித்ததில்லை எனக் கூறப்படுகின்றது.
இராணுவ தளபதியாக சன்சய வனசிங்க samugammedia இலங்கையின் 25 ஆவது இராணுவத் தளபதியாக மேயர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராணுவத்தளபதி லெப்டினல் ஜெனரல் லிகும் லியனகேவின் சேவை கால நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில், மேயர் ஜெனரல் சஞ்சய வனசிங்க எதிர்வரும் ஒக்ரோபர் 13 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார். எனினும் சஞ்சய வணசிங்கவுக்கு சேவைக்கால நீடிப்பை வழங்கி, லிகும்லியனகேவுக்கு பின்னர் அவரை இராணுவத் தளபதியாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது. முன்னாள் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த மகனான, சஞ்சய் வனசிங்க இராணுவத்தளபதியானால் அது உலகசாதனையாக அமையலாம் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தந்தையும்,மகனும் இராணுவத் தளபதியாக இதுவரை எந்தவொரு நாட்டிலும் பதவி வகித்ததில்லை எனக் கூறப்படுகின்றது.