• Sep 20 2024

தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்- பொலிஸார் விசாரணை!Samugammedia

Tamil nila / Jun 13th 2023, 8:04 am
image

Advertisement

நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து கொக்காவெவ பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சுகயீனமடைந்த தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

கொக்காவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுத் திபுல் ஏரி பகுதியில் விகாரை நடத்தி வந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனது தாயுடன் பூஜை நடவடிக்கைக்காக விகாரைக்கு வந்துள்ளார். அங்கு வந்த போது, ​​சிறுமியின் உடலில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகக் கூறி, குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுமியையும் தாயையும் பூஜை செய்து கொண்டிருந்த போது, ​​சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அமானுஷ்ய சக்திகளை அகற்ற தேவையான வேலைகளை தயார் செய்த பின்னர், தாயாரை வெளியே செல்லுமாறு கபுவா எனப்படும் விகாரையின் பாதுகாவலர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பின்னர், அந்த நபர் சிறுமியின் உடலில் கடவுள் வந்துள்ளார் என்று கூறி சிறுமியின் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து “கடவுள் வந்துள்ளார்” என பலமுறை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சிறுமி வீட்டுக்குச் சென்று இது குறித்து தனது தாயாரிடம் கூறியதையடுத்து, தாய் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்- பொலிஸார் விசாரணைSamugammedia நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து கொக்காவெவ பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சுகயீனமடைந்த தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கொக்காவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுத் திபுல் ஏரி பகுதியில் விகாரை நடத்தி வந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனது தாயுடன் பூஜை நடவடிக்கைக்காக விகாரைக்கு வந்துள்ளார். அங்கு வந்த போது, ​​சிறுமியின் உடலில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகக் கூறி, குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் சிறுமியையும் தாயையும் பூஜை செய்து கொண்டிருந்த போது, ​​சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அமானுஷ்ய சக்திகளை அகற்ற தேவையான வேலைகளை தயார் செய்த பின்னர், தாயாரை வெளியே செல்லுமாறு கபுவா எனப்படும் விகாரையின் பாதுகாவலர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த நபர் சிறுமியின் உடலில் கடவுள் வந்துள்ளார் என்று கூறி சிறுமியின் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து “கடவுள் வந்துள்ளார்” என பலமுறை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சிறுமி வீட்டுக்குச் சென்று இது குறித்து தனது தாயாரிடம் கூறியதையடுத்து, தாய் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement